tag:blogger.com,1999:blog-8984261379789039446.post3591037735209487228..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: ஏழுமலை ஜமாbavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-90327232308393116712010-03-09T23:52:40.481-08:002010-03-09T23:52:40.481-08:00கலையில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள ஒரு கலைஞனின் மிக கொடிய த...கலையில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள ஒரு கலைஞனின் மிக கொடிய தருணம், அக்கலையே, அழிவைச் சந்திக்கும் நேரம்தான். <br /><br />'ஏழுமலை ஜமா' என்ற, இவ்வளவு கனமான கதையை ஜனரஞ்சகமாக சொன்ன அதே நேரம், கதையின் அழுத்தம் சிறிதும் <br /><br />குறையாமல் இயக்கப்பட்டதால், இது ஒரு சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை. <br />திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமம் ஒன்றை மையாமாக கொண்ட கதையிது.<br /><br />ஏழுமலை என்பவர் ஒரு கூத்து வாத்தியார். துரியோதனன் கேரக்டர் செய்வதில் பெயர் பெற்றவர். அவரது குழுவின் <br /><br />'பாஞ்சாலி சபதம்' நாடகம் போன்றவை உள்ளுர் திருவிழாவில் அடிக்கடி அரங்கேற்றப்படும். <br />ஒருமுறை திருவிழாவில் நாடகத்திற்குப் பதிலாக, திரைப்பட வீடியோ காண்பிக்கப்படும் என அறிந்து அவரது ஜமா <br /><br />அதிர்கிறது. பிழைப்புக்கு வழிதேடி ஒவ்வொருவரும் ஒரு தொழில் தேடிக்கொள்கின்றனர். நமது வாத்தியாரும், பெங்களுர் <br /><br />சென்று காய்கறி மூட்டை தூக்கி பிழைக்கச் செல்கிறார். உள்ளூரில், வாத்தியார் என்று பெயர் பெற்ற ஏழுமலை, <br /><br />பெங்களுரில், அவமதிக்கப்படுகிறார். மீண்டும் ஊர் திரும்புகிறார். <br /><br />அவரது ஜமா உறுப்பினர்கள் ஒன்று கூடி விவாதிக்கும்போது ஒவ்வொருவரும் ஒரு யோசனை சொல்கிறார்கள். <br />ரிக்ஷா ஓட்டுவது, கரும்பு வெட்டுவது, கட்டிட வேலை பார்ப்பது என விதவிதமான யோசனைகள் கிளம்புகின்றன. <br /><br />எல்லாவற்றையும் நிராகரித்த ஏழுமலை, 'போங்கடா, வந்துட்டானுங்க. வாத்தியாரே, கூத்து போடலாமான்னு ஒருத்தராவது <br /><br />கேக்கறீங்களாடா' என்று கேட்டுவிட்டு விரக்தியோடு நகர்கிறார். கலைஞனுக்கும் மற்ற சாதாரண மனிதனுக்கும் உள்ள <br /><br />வித்யாசத்தை சிறுகாட்சியில், குறைந்த நேரத்தில் மனதில் பதிய வைக்கிறார்கள். உண்மைக்கலைஞனால் கலையைத்தவிர <br /><br />வேறெதையும் பிழைப்பாக ஏற்க இயலாது என்பது தெளிவாகிறது. <br /><br />'வாழ்க்கையில் கவிதை எழுதுபவன் கவிஞனல்ல. கவிப்புணர்வையே வாழ்வாக ஏற்றுக்கொண்டவனே கவிஞன்' என்ற <br /><br />பாரதியின் விளக்கம் கவிஞனுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு கலைஞனுக்கும் தான் என்று புரிந்தேன். <br /><br />பின் ஏழுமலை, மிதமிஞ்சி குடித்து விட்டு திரிகிறார். ஒரு புது கூத்து கூட்ட ஒத்திகையை பார்க்க நேர்கிறார். அந்த <br /><br />கூட்டத்தின் வாத்தியாரின் தவற்றை ஏசிவிட்டு ஏழுமலை, ஆடிக்காட்டுகிறார். இறுதியில் நிலைதடுமாறி விழுந்து <br /><br />விடுகிறார். இறுதியில் இவர் யாரென அறியப்படுகிறார்.<br /><br />வலிமையான கதை. சிக்கலில்லாத திரைக்கதை. தத்ரூபமான, படைப்புத்திறனுள்ள ஒளிப்பதிவு, அற்புதமான எடிட்டிங், <br /><br />சிறந்த இயக்கம் இப்படத்தின் நிறைவுகள். ஒளிப்பதிவாளர் மற்றும் அவர் துனைவர்கள் மிகவும் பாராட்டப்பட <br /><br />வேண்டியவர்கள்.தத்ருபமான இசை கொடுத்தவர்கள் இக்கலையில் தேர்ந்தவர்கள் என்பதால் இசை சிறப்பாக அமைந்ததில் <br /><br />ஆச்சரியம் ஏதுமில்லை. இசையை சத்தமில்லாமல்(noiseless) கொடுத்த சவுண்ட் எடிட்டருக்கு பாராட்டுக்கள். <br /><br />சிற்சில இடங்களில் வசனம்(novice) சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும். இருந்தாலும், இது மாபெரும் படைப்பு என <br /><br />அறியப்படும்.ஆர்.இரவிச்சந்திரன், அருணை பொறியியல் கல்லூரி, திமலைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-65636258299490028992009-10-25T09:53:49.720-07:002009-10-25T09:53:49.720-07:00ஏழுமலை ஜமா கதையும் குறும்படமும் வ்ருவானது குறித்த ...ஏழுமலை ஜமா கதையும் குறும்படமும் வ்ருவானது குறித்த தங்களது பதிவு தங்களின் படைப்பு மனத்தையும் கருணாவின் குறும்பட ஆக்கமுயற்சி வெற்றியையும் ஒருசேரஉணர்த்தியது.புதுவை ஞானகுமாரன்https://www.blogger.com/profile/00432897935499733546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-62898406024961326402009-10-23T04:51:32.463-07:002009-10-23T04:51:32.463-07:00முதலில் வாழ்த்துகள் பவா.
//த.மு.எ.க.ச.வின் 2009 ற...முதலில் வாழ்த்துகள் பவா. <br />//த.மு.எ.க.ச.வின் 2009 ற்கான சிறந்த சிறுகதை நூலாக "நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை" விருது //<br /><br />பதிவை பற்றி <br />நான் அந்த குறும்படத்தை பார்த்தபோது<br />ஏற்பட்ட அதிர்வு பற்றி சொல்ல <br />முடியவில்லை. உங்களின் பதிவு வழியே <br />அந்த அதிர்வு மீண்டும் எழுகிறது.<br />//அடர்த்தியான இருட்டுள்ள ஒரு பகுதி எனக்கு தேவைப்படுகிறது. என் இரகசிய அழுகையை சிந்துவதற்கு//<br />கனத்து போகிறது இதயம்.வேல்கண்ணன்http://rvelkannan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-88527684192769397002009-10-21T09:52:46.506-07:002009-10-21T09:52:46.506-07:00வணக்கம் தோழர்.
இணையதளத்திற்கு வந்தாலே -யாரோ யாருட...வணக்கம் தோழர்.<br /><br />இணையதளத்திற்கு வந்தாலே -யாரோ யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருப்பதும், அடையாளமில்லாத மொட்டைக் கடிதங்களுமாக - ஒரு குக்கிராமமாகத் தோற்றமளிக்கும். <br />உங்களது வலைப்பூ போல ஒரு சிலவைகள் மட்டும்தான் நினைவுகளைத்தூண்டுவதும், இனிமையான வாசிப்போடும் இருக்கின்றன.<br /><br />ஏழுமலை ஜமா - அற்புதமான . . . என்ன சொல்லுவது? கதையா படைப்பா சரியாகச்சொல்ல வார்த்தை இல்லை. தற்செயலாக கதையை நான் படிக்கும் முன்பாக கர்ணாவின் குறும்படத்தைப் பார்த்தேன். பின்பு, தொகுப்பில் கதை வாசிப்பு.<br /><br />வாசிப்பில் என்ன விதமாக என் உருவகப்படுத்துதல் இருந்ததோ அதை விட ஒரு படி மேலாக படத்தின் காட்சிப்படுத்துதல் அமைக்கப்பட்டிருந்தது. .<br />சிறுகதைகளை படமாக எடுப்பவர்களுக்கு இந்த கதையையும், குறும்படத்தையும் ஒரு முறையாவது வாசிக்கவும்-பார்க்கவும் கொடுக்கவேண்டும்.<br />எழுத்தாளனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு காட்சி.ஒரு எழுத்தைக்கூட சிதைக்காத நேர்மை.<br /><br />த.மு.எ.க.ச.வின் 2009 ற்கான சிறந்த சிறுகதை நூலாக "நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை" விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.<br />நன்றி.Acu Healer.UMAR FAROOK.Ahttps://www.blogger.com/profile/15177393687833932708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-59930954103986243182009-10-21T00:56:26.881-07:002009-10-21T00:56:26.881-07:00பவா,
எழுதுவதன், வாசிப்பதன் சுவாரசியத்தைவிட வாழ்வைப...பவா,<br />எழுதுவதன், வாசிப்பதன் சுவாரசியத்தைவிட வாழ்வைப் பேசிப் பகிர்வதில் உணரும் அன்யோன்யம் அதீதமானது. கூச்ச சுபாவியாகவே இருபது வருட வாசிப்பை கழித்துவிட்ட காலங்களில், உங்களை ஒரே முறை மட்டும் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. வம்சி புக்ஸ் என்ற பெயரை நான் முதன்முதலில், இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள் புத்தகத்தின் வாயிலாகத்தான் அறிமுகம். தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.<br /><br />- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-73147177021713906962009-10-20T22:56:01.302-07:002009-10-20T22:56:01.302-07:00பவா.,
கடைசி வரிகள் கண்ணீரை வரவழைத்து விட்டது.
கூத்...பவா.,<br />கடைசி வரிகள் கண்ணீரை வரவழைத்து விட்டது.<br />கூத்துக்கள் போல வழக்கொழிந்து போனவை எத்தனையோ...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-86980526610002596262009-10-20T11:07:08.512-07:002009-10-20T11:07:08.512-07:00பவா,
நாம் பேசிடாத கதைகளை இங்கே படிப்பதற்கு மகிழ்ச்...பவா,<br />நாம் பேசிடாத கதைகளை இங்கே படிப்பதற்கு மகிழ்ச்சி.ஒரு நூற்றாண்டு முழுக்க பேசினாலும் தீராத கதைகளை கொண்டிருக்கும் உங்களின் மசி அவ்வப்போதாவது எழுதட்டும்.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com