Saturday, June 5, 2010

புதிய பார்வையில்....

புதிய பார்வைக்காக 'இலக்கிய காதலர்கள்' என்ற பொதுத் தலைப்பில் என்னிடமும் ஷைலஜாவிடமும் எங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா என கேட்டார்கள்.
நீண்ட தயக்கத்திற்குபிறகே சம்மதித்தோம். ஆனால் பேச ஆரம்பித்த போது மிகுந்த மனத்தடைகள் ஏற்பட்டது. மீடியாவுக்காக கான்ஷியசாக இருக்க முடியவில்லை.
புத்தகம் வந்ததும் படித்தால் அந்த கார்காலத்தின் எந்த ஈரமும் இக்கட்டுரையில் பதிவாகவில்லை.
நிகழ்காலத்தில் உட்கார்ந்து பழையவைகளை மீட்டுக் கொண்டு வருவது எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.
இக்கட்டுரைக்கான புகைப்படங்கள் எம்.ஆர். விவேகானந்தன், பினு பாஸ்கர், காஞ்சனை சீனிவாசன் ஆகிய மூன்று முக்கிய புகைப்பட கலைஞர்களால் மூன்று வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்டவைகள்.