Wednesday, January 6, 2010

'வம்சி'யில் நாசர்

இப்புத்தக கண்காட்சி தொடங்கியதிலிருந்து இன்றுவரை பல்வேறு
ஆளுமைகள் 'வம்சி'க்கு வந்து உரையாடி புத்தகங்கள் வாங்கி,
எங்கள் ரேக்குகளைப் பார்த்து அதிசயித்து 'எங்க செய்தீங்க'
எனக் கேட்டு எங்கள் மூன்று மாத வலியைக் கொஞ்சம் மறக்க
செய்திருக்கிறார்கள்.
நான் இன்றும் சென்னைப் பக்கமே போக முடியலை. இங்கிருக்கும்
ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் புத்தகத்தை முடித்தணுப்ப முடிகிறது.
9,10 இரு நாட்களில் மட்டும்தான் புத்தக அரங்கில் இருக்க முடியும் போல.
அவ்வப்போது ஷைலஜாவும், ஜெயஸ்ரீயும் சின்ன சின்ன
விஷயங்களுக்கெல்லாம் உற்சாகப்பட்டு தொலைபேசியில்
என்னை அழைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள், நேற்று
ஒரு பெண் மதியம் 2 மணியிலிருந்து 2 மணிவரை 'வம்சி'யிலேயே
காத்திருந்து 'சூர்ப்பனகை' (கெ.ஆர். மீரா-தமிழில் : கே.வி. ஷைலஜா)
தொகுப்பு வந்தவுடன் வாங்கிப் போயிருக்கிறார். இத்தனை எதிர்பார்ப்புக்கு
பரிசாக பணம் வாங்காமல் அத்தொகுப்பை ஷைலஜ கையெழுத்திட்டு தந்ததற்கு
அப்பெண் மிக நெகிழ்ந்து ஷைலஜாவின் கைப்பிடித்து தன் நன்றியை
ஸ்பரிசத்தால் பகிர்ந்து கொண்டது........
நேற்று நண்பர் நாசர் தொலைபேசியில் அழைத்து உங்க ஸ்டால் நோம்பர்
என்னவென்று கேட்டு, மிக முக்கியமான புத்தகங்களை வாங்கி போயிருக்கிறார்.
அப்போது எதேச்சையாக அங்கு வந்த ஆர்.ஆர். சீனிவாசன் எடுத்த புகைப்படங்கள் இவைகள்.







இப் புகைப்படங்களில் மட்டுமே 'வம்சி' யின் ரேக்குகளின் எளிமையான
அழகை தரிசிக்க முடிந்தது ஏன்னென்றால் அப்படி இருக்கிறதுச் சூழல்....

19. டி.எம்.சாரோனிலிருந்து...: வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்

19. டி.எம்.சாரோனிலிருந்து...: வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்