Wednesday, October 20, 2010

மழை மனிதர்கள்


புல் கலாம் சாத்

வம்சி புக்ஸ் ரம்பித்து ன் முதல் புத்தக வெளியீட்டு விழாவை திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெரும் வாசகர்களின் பங்கேற்புடன் நடத்தினோம். சிறப்பு ழைப்பாளர்களாக ழுத்தாளர்

ச. தமிழ்ச்செல்வன், யக்குனர் பாலுமகேந்திரா, ழுத்தாளர் திலகவதி, ளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வர்களோடு புல்கலாம் சாத் ன்ற ந்தப் புகைப்பட கலைஞன். ழைப்பாளர்கள் ல்லோரும் லேசான மழைத்தூறலினூடே ந்த பரந்த மைதானத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது புல் ரு ட்டோவில் வந்திறங்கினான். ல்லோருமே ரு வித ச்சர்யத்தோடு வனைப் பார்க்கிறார்கள். நீண்டு வளர்ந்த சுருள் முடியை றுக்கி ரப்பர் பேண்ட் போடப்பட்டுள்ள குடுமி, சிகப்பு கல்பதித்த கடுக்கன், கழுத்தில் தொங்கும்

ற்றை ருத்ராட்ச கொட்டை மாலை, நல்ல ரக்குக் கலரில் ரு நீண்ட ஜிப்பா, தோடு? கரை போட்ட வேட்டி.

கூடியிருந்த படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் தோ ரு மர்ம சிரிப்பும், ச்சர்யமும் துளிர்த்த கணமது. நான் புலின் கைகளைப் பிடித்து வரவேற்று, ந்த வேட்டியைப்பற்றி விசாரித்தேன். ரு பெரும் ரவாரத்தோடு து நேற்று திருவண்ணாமலையில்தான் வாங்கியதென்றும், வெள்ளை வேட்டிக்குக் கறுப்பு, சிவப்பு கலர்வைத்த கரை ரொம்ப ழகென்றும் விவரிக்க, நான் து தமிழ்நாட்டில் ரு குறிப்பிட்டசியல் ட்சியினர் கட்டும் வேட்டியென்று விளக்க, வசர வசரமாய் வந்த ட்டோவிலேயே தன் றைக்கு திரும்பிப்போய் டுத்த ரை மணி நேரத்தில் ன்னொரு புது வேட்டியுடன் திரும்பி வந்தான். தற்குள் நிகழ்ச்சி துவங்கிவிட்டது.

‘’து பரவாயில்லையா பவா, துவும் நல்ல கலர் காம்ப்பினேஷன்’’ ன்று குதூகலித்த ந்த நிமிடத்தை ப்படியே தக்க வைக்க நினைத்து மேடையில் மர வைத்தோம். னால் து பா.ம.க கட்சி கரை வைத்த வேட்டி.

ரு கள்ளம் கபடமற்ற கலைஞனின் பின் விளைவுகள் பற்றிய ந்த கவலையுமற்ற ந்த மனதோடுதான் நான் புலைப்பற்றிய ன் பழைய ஞாபகங்களை பதிய விரும்புகிறேன்.

சுற்றி நீரால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சின். தெருவின் இருபக்கங்களிலும் வியாபித்துள்ள கட்டிடங்களின் கம்பீரத்தைத்தான் அவர்கள் மட்டாஞ்சேரி என்றழைக்கிறார்கள். பழமை மாறாத அந்த உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றில்தான் அபுலின் மாயலோகம் ஸ்டுடியோ. கற்சிலைகளுக்கு கதம்பமாலையிட்ட அதன் உள்அலங்காரமோ, அச்சுவரெங்கும் மாட்டப்பட்டுள்ள Black&white புகைப்படப் பழமையோ, சாதாரண சேர், டேபிளை நிராகரித்து, முற்றிலும் வேறு மாதிரி வடிவமைக்கப்பட்ட இருக்கையை மீறி, அந்த விசாலமான அறையெங்கும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலான தனிமையும், பழமையும் படிந்திருந்தது. அவன் நிறுவனத்தின் பெயர் மசாலா கம்பெனி. பச்சைக் காம்பில் பழுத்திருந்த மிளகாய் பழம்தான் அதன் சிம்பல். அந்த விசாலமான ஹாலின் ஆளுயர ஜன்னல்களைத் திறந்தால் நம் கண்ணுக்கெட்டின தூரம்வரை கடலின் வெண்மையும், நீலமும் புரளும் ஆர்ப்பரிப்பு.

அங்கு, நான் என் கதையொன்றை வாசிக் அழைக்கப்பட்டிருந்தேன். நாற்பது, ஐம்பது வெளிநாட்டுக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சிகரெட் புகை அந்த அறையில் நிரம்பி மட்டாஞ்சேரி பஜாரில் இறங்கிக் கொண்டிருந்த சாயங்காலமது. ஒரு நிகழ்விற்கான துளி பதட்டமுமின்றி அபுல் என்னைக் கட்டி அணைத்து, அறிமுகப்படுத்தி என் சிறுகதையொன்றை வாசிக்க வேண்டினான். அறையின் ஒரு ஓரம் அவர்களே தயாரித்த Red wine நிரப்பப்பட்ட பாத்திரம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நான் அதுவரை பார்த்தறியாத அழகிய யுவதிகள் வெவ்வேறு அளவிலான உடைகளோடு wine போதையை ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். கொண்டாட்ட மனநிலையின் உச்சமான மௌனம் அது. நான் என் ‘‘ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’’ கதையை தமிழில் வாசிக்கிறேன். அம்மனநிலையைக் கொஞ்சமும் சிதையவிடாமல் என் நண்பர் ஆனந் ஸ்கரியா அதை அழகாக ஆங்கிலப்படுத்துகிறார். மாயலோகத்தின் இடைவெளி சுருங்கி இரவின் அடர்த்திக்கு வழிவிடுகிறது. இச்சூழலில் கரைய விரும்பும் ஒரே படைப்பாளி என நான் கருதிய கோணங்கிக்கு அங்கிருந்து பேசினேன். அடுத்த பத்தாவது மணி நேரத்தில் கோணங்கி மழையில் நனைந்து கொண்டே மாயலோகத்திற்குள் பிரவேசித்தான்.

மாயலோகத்தின் சுவர் எங்கும் வியாபித்திருந்த Black Mother ன்று தலைப்பிட்டு கொடுங்கல்லூர் கண்ணகி கோவில் திருவிழாவில் அபுலால் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் உக்கிரத்தில் நிலைக்குத்தி நின்றான் கோணங்கி. ‘‘இறடிக்கு நாலடி’’ என்ற நம் ஊர் வாசல் கதவு அளவுள்ள சட்டங்களில் பிரேம் செய்யப்பட்ட அடர்பச்சையும், வெள்ளையும், கலந்து எடுக்கப்பட்ட அமானுஷ்யமான புகைப்படங்கள் அவை. அமெரிக்க பத்திரிகை ஒன்றின் அசைன்மெண்டுக்காகக் கொடுங்கல்லூர் கண்ணகி ஆலய வெளியில் மழையில் படுத்துறங்கி, 1000 க்கும் மேற்பட்ட படங்களைத் தன் கேமராவுக்குள் புதைத்து வைத்திருந்தான் அபுல்.

அதிலிருந்து ஒரு படத்தை அச்சந்திப்பின் நினைவாக பெற்று, தன் ‘‘பிதிரா’’ நாவலின் அட்டைப்படத்திற்குக் கோணங்கி பயன்படுத்திக் கொண்டான். கோவில் வளாகமெங்கும் குவித்து வைத்திருந்த கழுத்தறுபட்ட கோழித் தலைகளும், சட்டை அணியாத வெற்று முதுகோடு கண்ணகியை நோக்கி வணங்கும் உரமேறிய உடம்புகளும், கையில் அரிவாளோடும் கடித்த உதடுகளோடும் சினமேறிய பெண்கள் முகங்களும் நாம் எங்கும் காணக்கிடைக்காத பொக்கிஷங்கள்.

அபுலின் படைப்பியக்கம் அலாதியானது. காட்டாற்றின் சத்தத்தையும், அமைதியையும் அடுத்தடுத்து உணர முடிவது. பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இளம் பெண்கள் பலர் அவனைத் தேடி வந்தவண்ணம் இருந்தனர். அவர்களோடு அவன் கழித்த நாட்கள் நீரின் சுழிப்பு மாதிரியானது. அதை நாம் பிடித்து நிறுத்த முயலும் அவசரத்திலேயே அது கலைந்து மறையும். தன் கேமராவை அவன் ஓர் உயிருள்ள ஜீவனைப் பற்றியிருப்பது மாதிரியே தன்னோடு எப்போதும் பற்றியிருப்பான்.

பாபர் மசூதி இடிப்பிற்குப்பின் தேசம் முழுவதும் நிலவிய பேரமைதியை அவன் படமாக்கிய உந்துதலே என்.எஸ்.மாதவனின் Blue pencil ன்ற சிறுகதை. மாதவனின் ‘‘லந்தன் பத்தேரியில் லுத்தினியாக்கள்’’ என்ற நாவலில் அபுல் ஒரு தனி கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். ஃபோர்ட் கொச்சினில், கடலலை சீறும் தருணங்களும், அடர் மழைப் பொழிவின் இரவுகளும், பெருமரங்கள் உதிர்ந்து துளிர்க்கும் பருவங்களும் அபுலின் கேமராவுக்குள் அடைக்கலம் தேடி ஒளிந்து கொள்கின்றன. அவன், இரத்தக் கவிச்சியோடு பிறந்த குழந்தையின் மீது புரளும் பிரசவ மயக்கம் தெளியாத தாயின் பரிவுமிக்க விரல்களின் ஸ்பரிசம் மாதிரி அவற்றைத் தன்னுள் புதைத்துக் கொள்கிறான்.

எனக்குப் பரிசளிக்க, ஆண்டிற்கு ஒரு முறை மலையடிவாரத்தில் நடக்கும் குதிரை சந்தையின் பின்னணியில் திருவண்ணாமலை மலையை அபுல் பதிவு செய்திருப்பது வேறு எந்த கலைஞனுக்கும் சாத்தியமற்றது.

அபுல், கலர் படங்கள் எடுத்து நான் பார்த்ததில்லை. தன் புகைப்படங்களுக்கென்று தனி வரையறைகளை அவன் வகுத்து வைத்துள்ளான். Digital Camera -வை அவன் தொடுவதில்லை. Film போட்டு எடுத்த படங்களைக் கழுவி முடித்து பிரிண்ட் போடுவதற்குமுன் ஆணியால் Film மை கீறுகிறான். அதன் அழகியலைச் சிதைக்கிறான். புகைப்படங்களின் ஆகச் சிறந்த நேர்த்தி அவனுக்கெதிரானவை. அது அவனுக்கொரு பேராடும் கருவி. யுத்தகளத்தில் துள்ளும் ஆயுதத்திற்கு எதற்கு பூ அலங்காரம்?

எதிர் கொண்டெழும் பேரலைகளைப் பார்த்து, கடற்கரை மணலையும் தாண்டிய ஓட்டமல்ல அபுலின் வாழ்வு. அது ஒரு கலைஞனுக்கான பிரத்தேயகமான, வெளிப்படையானது. பெரும்பாலான தமிழ்க்கலைஞர்களை எப்போதும் பொறாமைப்படுத்தும் அபுலின் கொண்டாட்ட வாழ்வு. நான் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அபுல் ஒரு புது ஸ்நேகிதியை அறிமுகப்படுத்துவான். பெரும்பாலும் வெளிநாட்டுப் பெண்கள் அவன் படைப்பின் மீதும் ஆளுமையின் மீதும் அப்பெண்கள் அடைந்த பரவசத்தையும், உன்மத்தத்தையும் பார்த்து 19. டி.ஏம். சாரோனுக்குக் கேட்காதவாறு பெருமூச்சு விட்டிருக்கிறேன்.

அபுலுக்குத் தமிழ்நாட்டில் மிகப் பிடித்த மனிதர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் சினிமா Poster களை மட்டும் புகைப்படங்களாக்கி ஒரு தனி Showவே நடத்தியிருக்கிறான். மட்டாஞ்சேரியின் பின் இரவு உறக்கத்தில் எம்.ஜி.ஆரின் சினிமாப் பாடல்களை உரக்கப் பாடி கடலலைகளைக் கலவரப்படுத்துவான். தன் Cell phone-- இன் Ring tone ‘‘பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்’’ தான். தன்னை ஒரு மலையாளி என்றோ, முசல்மான் என்றோ ஓரு விநாடிகூட உணராதவன். வாழ்விற்கும் படைப்புக்குமான இடைவெளியென ஒரு அங்குலத்தையும் அவன் அனுமதித்ததில்லை.

சமீபத்தில், தன் சமீபத்திய காதல் மனைவியோடு என் வீட்டிற்கு மதிய உணவிற்கு வந்திருந்தான். பெரும் குடும்பப் பொறுப்பேறியிருந்தவன் மாதிரி சாப்பிட்டு முடிக்கும் வரை நடித்துக் கொண்டிருந்தான். அந்த பெண்ணை அபுல் காதலித்துக் கொண்டிருந்த போதே நானறிவேன். அவன் புகைப்படங்களின் வசீகரத்துக்குப் பரிசாக கிடைத்த ஒரு ஈரானியப் பேரழகி. Film Editer.. அவ்வப்போது வாங்கப்பட்ட அவனுக்கான விலையுயர்ந்த Wine பாட்டில்களோடு அவள் இந்தியா வந்திறங்குவாள். இப்போது அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பையன் இருக்கிறான். அன்று வீட்டில் துருதுரு கண்களோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த அந்தப் பையனைப் பிடித்து அவனை எனக்கு நேராக நிறுத்தி குனிந்து கேட்டேன்,

‘‘ஊன் பேரென்ன?’’

‘‘நாராயணன் ரஹ்மான்’’

13 comments:

  1. இந்தப் படங்கள் முதுகுத்தண்டில் ஏதோ ஒரு நரம்பை தீண்டுகின்றன. அந்த கலைஞனை /வாழ்விடத்தை /வாழ்வியலை குறித்த உங்கள் விவரிப்பு மிகப் பழைய குகையின் சுவர் சித்திரத்தை மனதில் வரைகிறது.

    ஒரு மிக நல்ல அகத்தூண்டலும் சந்திக்கும் ஆவலையும் ஒருசேர பிதுக்குகிறது நினைவின் வௌவால் வீச்சம் அறையும் வெளியில் இருந்து

    இந்தப் பகிர்வுக்கும் உணர்வுக் கடத்தலுக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  2. அன்பு பவா.
    அபுல் பற்றிய இந்தபதிவு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது, சுதந்திரமான வாழ்வின் அடையாளமாக, கலைஞன் ஒருவனின் கல்லங்கபடமில்லாத மனத்தின் வெளிப்பாடு.அற்புதமான உங்கள் நடை
    கடைசியில்

    "நாராயண ரஹ்மான்"
    இவ்வளவும் பிரமிக்கவைக்கிறது.
    குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

    ReplyDelete
  3. அன்பு பவா.
    அபுல் பற்றிய இந்தபதிவு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது, சுதந்திரமான வாழ்வின் அடையாளமாக, கலைஞன் ஒருவனின் கல்லங்கபடமில்லாத மனத்தின் வெளிப்பாடு.அற்புதமான உங்கள் நடை
    கடைசியில்

    "நாராயண ரஹ்மான்"
    இவ்வளவும் பிரமிக்கவைக்கிறது.
    குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

    ReplyDelete
  4. ரத்த கவுச்சியோடு பிறந்த குழந்தையின் மீது புரளும் ,பிரசவ மயக்கம் தெளியாத பரிவுமிக்க தாயின் விரல்களாய் பற்றியிருக்கிற ,அபுல் கலாம் ஆசாத்தின் கேமராவிற்கு ஆயிரம் முத்தங்கள்

    ReplyDelete
  5. கலையின் உன்மத்தத்தில் கரைய தைரியமில்லை எனினும், கரைந்த கலைஞனை ரசிக்கவாவது முடிகிறதே என்று என்னை நானே ஆறுதல் செய்துகொள்கிறேன்.

    அருமையான அறிமுகம், நன்றி....

    ReplyDelete
  6. பவா,
    மனிதர்களை நீங்கள் அனுகும் விதம் எனக்கு மிகப் பிடித்தமானது. உங்கள் உலகில் நெகிழ்வற்ற ஒன்று என ஏதாவது இருக்கிறதா என்ன? அபுலைப் பற்றிய இந்த எழுத்து மிகவும் இணக்கமானதொரு மனநிலையைத் தருகிறது. புகைப்படத்தை கீறுவதும் நவீன வடிவங்களைப் புறக்கணிப்பதும் அபுலின் மீது இன்னும் வாஞ்சையைத் தூண்டுகிற இயல்புகளாக இருக்கின்றன. நவம்பரில் நேரம் கிடைத்தால் ஒரு பயணத்தை மேற்கொள்வாமா பவா?

    ReplyDelete
  7. இது இந்தப் பதிவிற்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம். அதற்கு முதலில் மன்னிக்கவும். சிறகிசைத்த காலம் புத்தகம் படித்தேன். அதைப் பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன். சமயம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கவும். மறுபடி மன்னிக்கவும் பதிவிற்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டமாக இருப்பதால்.

    http://ramamoorthygopi.blogspot.com/2010/10/12.html

    ReplyDelete
  8. திரு.பவா,
    சில காலம் முன் ஈரோட்டில் சந்தித்தபோது உங்களைக் குறித்து எனக்குப் பெரிதாய் அபிப்பிராயங்கள் இல்லை. குழந்தைகள் கொண்டாட்டங்களைக் கண்டபோது அபிப்பிராயம் உருவாகத்தொடங்கிவிட்டது... பெரிதாக ஏதும் செய்ய முடியாதிருக்கிறவர்களுக்குச் செய்கிறவர்களைக் குறித்து உருவாவது.

    ReplyDelete
  9. பிரியமுள்ள பவா!
    முதலில் வல்சன், பின்பு யோகி ராம்சுரத்குமார், இப்போது அபுல் கலாம் ஆசாத் என நீங்கள் அறிமுகப்படுத்திக்கொண்டே வரும் மனிதர்கள் வாழ்வின் மீதான காதலை, வேட்கையை,தீவிரத்தன்மையை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள்.
    கலையும் அது மனித மனங்களில் கிளர்த்தும் நெகிழ்ச்சித்தன்மையும், உருவாக்கும் அலைக்கழிப்பும்
    கொண்ட வாழ்வினூடே, கலையாகவே மாறிப்போன அபுல் கலாம் ஆசாத் போன்ற அசலான கலை மனிதர்களை உங்கள் எழுத்தின் ஊடே சந்திப்பதில் பெருமகிழ்ச்சியும் மன நிறைவும் அடைகிறேன். மிக்க நன்றி,,

    பேரன்பு,
    சரவணன்

    ReplyDelete
  10. மிக,மிக நல்ல பதிவாக இருக்கிறது தோழர்.சமூகம் கொண்டாடாத இம்மாதிரியான எதிர்நிலைக் கலைஞர்களை பார்ப்பது அபூர்வம்.

    ReplyDelete
  11. தன் போக்கில் பேராவேசத்துடன் செல்லக்கூடிய காட்டாறு போன்ற நடை உங்களுடையது. ஆனால், அதனுடன் நெகிழ்வும் உணர்வைக் கடத்தலும் இயைந்த உங்கள் மொழி என்றைக்கும் என்னை ஈர்ப்பது. சற்றே ஆற்றாமையையும் பொறாமையையும் என்னுள் கிளர்த்துவது. எளிமையான, எளிதில் வசப்படாத, ஒரு மனிதரைப் பற்றி அதே தன்மையுள்ள நீங்கள் எழுதியிருக்கும் அபுல் பற்றிய இந்தப் பதிவு மேலும் இப்படியான வாழ்விற்கும் படைப்பிற்குமான இடைவெளியற்ற மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது. மீண்டும் வருவேன். மேலும் சில மனிதர்களை உங்கள் மொழியில் தரிசிக்க...

    ReplyDelete
  12. //அபுலின் படைப்பியக்கம் அலாதியானது. காட்டாற்றின் சத்தத்தையும், அமைதியையும் அடுத்தடுத்து உணர முடிவது. பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இளம் பெண்கள் பலர் அவனைத் தேடி வந்தவண்ணம் இருந்தனர். அவர்களோடு அவன் கழித்த நாட்கள் நீரின் சுழிப்பு மாதிரியானது. அதை நாம் பிடித்து நிறுத்த முயலும் அவசரத்திலேயே அது கலைந்து மறையும். தன் கேமராவை அவன் ஓர் உயிருள்ள ஜீவனைப் பற்றியிருப்பது மாதிரியே தன்னோடு எப்போதும் பற்றியிருப்பான்.//

    ஒவ்வொரு வரியையும் ரசித்தேன் பவா...மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். அபுல் போன்ற அற்புத கலைஞனின் உலகிற்கு என்னையும் உங்கள் எழுத்தின் மூலம் அழைத்துச் சென்றதற்கு நன்றி பவா.

    நெகிழ்ச்சியான பதிவு பவா....

    ReplyDelete
  13. இது வரை கடந்து வரும் பெயர்களின் ஒன்றாக மட்டுமே இருந்தவரின் பெயரை இனி பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன் அவரைப் பற்றிய உங்களின் நெகிழ்வை.

    எங்கும் நிறுத்தி விட முடியாத தொடர்ச்சியான வாசிப்பனுபவத்தைத் தந்த உங்கள் எழுத்து மனிதர்கள் மீதான உங்கள் அன்பையும் அணுக்கத்தையும் காட்டுகிறது பவா சார்.

    ReplyDelete