Saturday, February 16, 2013

வஞ்சியர் காண்டம்


     கடந்த புதன் கிழமை
பிரளயன் எழுதி, பேரா.ராஜீ இயக்கியவஞ்சியர் காண்டம்’  நாடகத்தை திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேல் நிலைப்பள்ளி  வரலாற்று சிறப்புமிக்க சிகப்பு கட்டிட முற்றத்தில் நிகழ்த்தினோம்.
ஆறு மணிவரை நூறு பேர் கூடவரவில்லையே என்ற மனப்பதற்றம் வழக்கம்போல் அதிகரித்தது. ஏழுமணிக்குள் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் மைதானம் நிறைந்தது. ஆயிரத்திற்கும் மேல் பெண்கள்.
பிரளயனின் கல்லூரித் தோழனும், முன்னாள் அமைச்சருமான திரு.கு. பிச்சாண்டி நாடகத்தை துவக்கி வைக்க, உலக புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள் அபுல்கலாம் ஆசாத், பிஜீபாஸ்கர், சாகித்ய அகடாமி விருதுபெற்ற  சௌக்கத் ஆகியோர் அம்மேடையை பெருமைப் படுத்தினார்கள்.
கண்ணகியின் கதையை மீளுருவாக்கம் செய்த அந்நாடகத்தின் முடிவில் கூட்டம் உறைந்து அப்படியே உட்கார்ந்திருந்தது.
பிஜீ பாஸ்கர் தன் கேமராவை தன் நண்பரும், மாதவிக்குட்டியின் கதையை மலையாள சினிமாவாக இயக்குபவரும், புகைப்படக் காரறுமாகிய Jiju Ebrahim மிடம் கொடுத்து எடுத்த அற்புத படங்கள் இவை.



  

3 comments: