Tuesday, June 14, 2011

தேசிய விருது பெற்ற தமிழ்த் திரைக் கலைஞர்களுடன் ஒரு நெகிழ்வான சந்திப்பு

தேசிய விருது பெற்ற தமிழ்த் திரைக் கலைஞர்களுடன் ஒரு நெகிழ்வான சந்திப்பு

தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட கலைஞர்களை சிறப்பிக்கும் விதமாகவும், அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதில் தேசிய விருதுப் பெற்ற வெற்றிமாறன், தம்பி ராமையா, கிஷோர் (படத்தொகுப்பாளர்), சரண்யா, தினேஷ் (நடனம்), வா. ஐ. ச. ஜெயபாலன், முரளி (ஒளிப்பதிவு, குறும்படம்) ஓவியர் ஜீவா ஆகியோரும், படத்தொகுப்பாளர் லெனின், எழுத்தாளர் ஷாஜி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்வு எதிர் வரும் சனிக்கிழமை (18-06-2011) அன்று மாலை ஆறு மணியளவில் திருவண்ணாமலையில் உள்ள, எஸ். கே.பி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.