Thursday, April 10, 2014

வம்சி புக்ஸ்

பத்து வருடங்களுக்கு முன்னால் மிகுந்த தயக்கத்தோடு எழுத்தாளர் திலகவதியின் ஆழ்ந்த ப்ரியத்தாலும் வற்புறுத்தலாலும் ஆரம்பிக்கப்பட்ட வம்சி புக்ஸ் பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. தன் குறுநாவல்களையே முதல் புத்தகமாக தந்த திலகவதி அவர்களுக்கு நன்றி.

இப்போது வம்சி புக்ஸ் 300 தலைப்புகளை எட்டியிருக்கிறது. அப்படி தமிழின் ஆக சிறந்த படைப்புகளை எங்களுக்கு பதிப்பிக்க தந்த எல்லா படைப்பாளிகளுக்கும் நன்றி.

உங்கள் எல்லோரோடும் சேர்ந்து பத்து ஆண்டின் நிறைவு விழாவினையும், ஒரு வாடகை கட்டிடத்திலிருந்து இன்னொரு வாடகை கட்டிடத்திற்கு எங்கள் அலுவலகத்தை மாற்றி அதன் திறப்பு விழாவினையும், திருவண்ணாமலையிலிருந்து எழுதும் படைப்பாளிகளின் மூன்று புத்தக வெளியீட்டு விழாவும் , ஒரு சேர சனி கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

நண்பர்கள் எப்போதும் போல உங்கள் நண்பர்களுடனும் வரவும்.