Saturday, December 1, 2012

கேரளாவில் என் மொழிபெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழா



என்னுடைய  ”நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” புத்தகம் மலையாளத்தில் திரு.ஸ்டான்லி அவர்களால் ”நட்சத்திரங்கள் ஒளிக்குந்ந   கற்ப பாத்ரம்” என்று மொழிப்பெயர்க்கப்பட்டு கோழிக்கோடு ராஸ்பெர்ரி பப்ளிக்கேஷனால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.  கோழிக்கோட்டில் ஹோட்டல் அழகாபுரியில் மிக நேர்த்தியாக வெளியீட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விழாவைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கில் பேரா. வேணுகோபாலப் பணிக்கர் தன்னுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்தும், மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் கட்டுரை வாசித்தார். மலையாள சாகித்யம் தமிழில் என்ற தலைப்பில் ஷைலஜா கட்டுரை வாசித்தார்.

மொழிபெயர்ப்பாளர்கள் ரகுராம் மற்றும் ஸ்டான்லியின் வாழ்த்துரையைத் தொடர்ந்து என்னுடைய ஏற்புரையுடன் விழா நிறைவுற்றது.
         
இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் மிகவும் நேசிக்கும் மலையாள மண்ணில் நடந்த விழாவும் ராஸ்பெர்ரி பதிப்பக நண்பர்கள் ஷாநவாஸ், மெஹ்ஜூப், ராஜேஷ் ஆகியோரின் ப்ரியமும் என்னை நெகிழ வைத்தது.


மொழிபெயர்ப்பாளர்கள் ரகுராம்,ஸ்டான்லி,பவாசெல்லதுரை,எழுத்தாளர் இந்து மேனோன்,பேரா.ஷெரீஃப் மற்றும் ஷைலஜா.


எழுத்தாளர் இந்து மேனோன் புத்தகத்தை வெளியிட பேரா.வேணுகோபாலப் பணிக்கர் பெற்றுக் கொள்கிறார்.

3 comments: