Saturday, November 30, 2013

என் தோழனிடமிருந்து நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

மலை மனிதனோடு ஒரு அக பயணம்                                                                                                                                                          
                                                                    ஜி.செல்வா


ந்தைப்பொருளாதாரம், அடிப்படைவாதத்தோடு கூட்டு வைத்து நடத்தும் வெறியாட்டத்தில் மனிதம் சிக்கி வதைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அன்பும் பாசமும் விளைந்த மண்ணில் குரோதம் தலைவிரித்தாடுகிறது. தோழமை, நட்பு கசியும் காதல் , ஆறுதல் சொற்கள் வேண்டிநிற்கிறது மனம்.இதற்குத்தானே இதோ என நம்முன் நிற்கிறது நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” - பவா. செல்லத்துரையின் சிறுகதைத் தொகுப்பு பதினோறு கதைகளுடன். பாறைக்கும், மண்ணுக்கும் கலைகளுக்கும் உயிர் கொடுக்கும் மக்கள்! அவர்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பில் தெறிக்கும் வெள்ளை பற்களின் ஒளி. இவைகள் தான் பவாவின் கதைக்களம்.
கதைகளை ஒருசேர ஒரேமூச்சில் வாசித்துவிடுவேன் என நுழைந்தால் ஒவ்வொரு கதை யும் தன்னை வெளிப்படுத்தியவுடன் வாசித்தவர் ஒரு விதமான உணர்வில் சிந்தனை வெளியில் பயணிக்கும் போது மற்ற கதைகள் கை கொட்டிச்சிரிக்கும்.சந்தைப் பொருளாதாரம் நம் பண்பாட்டை கலாச்சார நிகழ்வுகளை சீரழித்த வரலாற்று சாட்சி ஏழுமலை ஜமாகதை. பாரம்பரிய கலைகள் கூத்துக்கள் கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்படும் காரணத்தை நறுக்கென சொல்லிச் செல்கிறார் பவா. அத்தோடு கலைஞனை கலையை நேசிக்கும் மக்களின் பிரியத்தை வெளிப்படுத்தி நெஞ்சை கணக்க செய்கிறார்.கொத்துக் கொத்தாய் சிரிப்பும் பேச்சுமாய் இருக்கும் மனிதர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் நடத்தும் சேட்டை மிக நுட்பமாக வேறு வேறு மனிதர்கள்கதையில் வெளிக் காட்டப்பட்டுள்ளது.அப்பா - மகனின் உறவுகள், ரத்தமும் சதையுமான பேச்சுக்கள் ... மகன்கள் அப்பாவிட மிருந்து வேறுபடும் தருணங்கள்... இணையும் புள்ளிகள் இப்படியாய்... இதையும் தாண்டி இரண்டு கதைகள்.ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது. வாழ்வு அதுவரை தந்திராத சுவையை அவர்களுக் காக வழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்”. இந்த பிரியத்தை அனுபவிக்க , அவசியம் ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகளில்பயணிக்க வேண்டியுள்ளது.வாழ்வின் எந்த தருணத்தில், எந்த புள்ளியில் மதத்தின் அரவணைப்பில் மனிதன் அடைக் கலம் தேடுகிறான்? அதேமனிதன் எந்த பொறித்தட்டில் கண்கள் தெறித்து மதத்தின் கட்டுப் பாட்டில் சாதியம் விதைத்திருக்கும் விஷத்தை கருவறுக்கிறான்? இரண்டும் இரண்டு தளத்தில் இரு கதைகளின் வழியே.

ஜப்பான் கிழவன் காடு காற்றின் சத்தத்திற்கு வெறியாட்டம் போட்டு இவனை வெறி கொள்ள வைத்த தருணத்தில்தன்கண்ணிகளை பையில் பத்திரமாக வைத்து மதத்தில் ஆறுதல டைகிறான். குளத்துக்கு ஊர்த் தெருக்காரனுங்க காவலுக்கு ஆளு போட்டு மாசு மருவு தீட்டு படாம காப்பத்தி வருவைதைப் பற்றி அந்த காவலுக்கு வேலை வைக்காம இந்தப் பறத்தெரு.. இது வரையும் அந்தக் குளத்துல ஒரு உள்ளங்கை தண்ணி அள்ளி குடிக்காதது”.. “ பறத் தெருவை நாலா பிரிச்சி பாரதி, பாரதிதாசன் தெருன்னு பேர் மாத்திட்டாலும் மிலிட்ரிக்குப் போன வயசு பசங்க எழுதும் கடிதம் சரியா வந்து சேராததனால மறுபடி வேட்டவலம் காலனின்னே எழுத”.. இப்படியாகத் தொடரும் தலைமுறை கொடூரத்தை சாதியத்தை மதத்தின் பிடியிலிருந்து விலகிவந்து களம் கண்ட துசிங்காரக்குளம்”. வாசித்தவுடன் கடக்க முடியாமல் தலைமுறை பாரத்தை சுமக்க வைக்கிறது.மனிதர்களின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இயற்கையோடு சேர்த்து பின்னிப் பிணைந்து இழைத்த கதை சத்ரு”,. மனிதம் ஒரு சொட்டாக உதிர்ந்து பிரவாகம் எடுக்கிறது. இந்தப் பிரவாகத்தில் மூழ்கி தெப்பலாக எழுந்து நிற்கும் போது நமது முகங்கள் வன்மமற்று குழந்தை முகங்களாகி புன்னகை பூத்திருக்கும்.

முகம்கதையில் வரும் அம்முகுட்டி முகம் போலிருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.மலை, பனிக்காலம், இருட்டு, தார்சாலை, புழுதிதெரு, காடு, குளம், வயல் இப்படியாய் இவற் றோடு காய்ந்த தலைகள், ஈர மனிதர்கள், வறண்ட வயிறு, மனிதம் பூத்து குலுங்கும் சிரிப்பு, வாருங்கள்.. இந்த மலை மனிதனோடு ஒரு அகப்பயணத்திற்கு!இடையறாத தொடர்ந்த வாசிப்பை ஒரு வாழ்க்கையாகவே கொண்டபிரபஞ்சன் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் நூற்றாண்டுச் சிறுகதை வரலாற்றை கச்சிதமாக சொல்லி செல்வது சிறப்பு.

4 comments:

  1. இந்த புத்தகம் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. pls cell contact

      vamsibooks@yahoo.com

      Cell : 9445870995 Ph: 04175-251468

      Delete
  2. உங்கள் புத்தகத்தினைப் படிக்க ஆர்வமாய் இருக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும் புத்தகம் எந்த பதிப்பகம் வெளியிட்டது. எங்கு கிடைக்கும். ''பவா என்றொரு கதை சொல்லி'' ஆவணப் படத்தினைப் பார்த்ததேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. Dear Sir,

      Please Contact at :

      vamsibooks@yahoo.com

      9445870995, 9443222997, 04175 - 251468,

      with regards
      vamsi books

      Delete